பைக் மீது ஸ்கூட்டர் மோதி விபத்து- வாலிபர் பலி..

கோவை கிணத்துக்கடவு பக்கமுள்ள இம்மிடி பாளையத்தை சேர்ந்தவர் ராமன் .இவரது மகன் நிஷாந்த் (வயது 35 )இவர் நேற்று சுந்தராபுரம் மெயின் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு ஸ்கூட்டர் மீது இவரது பைக் மோதியது. இதில் ஸ்கூட்டரின் பின்னால் இருந்து வந்த சுந்தராபுரம் பாரத்நகரை சேர்ந்த பிரான்சிஸ் ( வயது 40) படுகாயம் அடைந்தார்.பைக் ஓட்டி வந்த நிஷாந்துக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இருவரும் சிகிச்சை கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர் .அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பைக் ஓட்டி வந்த நிஷாந்த் நேற்று இரவு இறந்தார் .இவர் தலையில் ஹெல்மெட் அணியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இது குறித்து கோவை கிழக்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..