போதை மாத்திரைகள் விற்பனை- இருவர் கைது..!

கோவை கரும்புக்கடை காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் முருகன் நேற்று இரவு அங்குள்ள ஆசாத் நகர் மைதானத்தில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு சந்தேகப்படும் படி  நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து சோதனை செய்தார். அவர்களிடம் 76 போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.இது தொடர்பாக கரும்புக்கடை ஆசாத் நகர் 9-வது வீதியை சேர்,ந்த உசேனார் சேட்டு ( வயது 28) குறிச்சி பிரிவு என். பி இட்டேரி, மன்சூர் ரகுமான் (வயது 29) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.இவர்கள் அந்த பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்கு வைத்திருந்ததாகவிசாரணையில் தெரியவந்தது.