கொலை முயற்சி வழக்கில் 31 ஆண்டுகள் மாயமானவர் தலைமறைவு குற்றவாளியாக அறிவிப்பு.!!

கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்தவர் முஜிபுர் ரகுமான் (வயது 50) இவர் மீது கடந்த 1992 ஆம் ஆண்டு உக்கடம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது. பிறகு அவர் தலைமறைவானார். இது தொடர்பான வழக்கு கோவை வெடிகுண்டு வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது .இந்த வழக்கில் முஜிபுர் ரகுமான் இதுவரை ஆஜராகவில்லை .இதை யடுத்து முஜிபுர் ரகுமான் இன்று (வெள்ளிக்கிழமை) போலீஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் இல்லை என்றால் அவர் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக கோர்ட்டு மூலம் அறிவிக்கப்படுவார் என்று கோவை உக்கடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தெரிவித்தார்.இதற்கு இடையே கோவையில் கடந்த 1998ஆம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் முஜிபுர் ரகுமான் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..