நூல் வியாபாரத்தில் ரு.18 லட்சம் மோசடி – 2 பேர் மீது வழக்கு..!

கோவை : மும்பையை சேர்ந்தவர் பரீக்த், நூல் வியாபாரி இவர் பாப்பநாயக்கன்பாளையம்,பரமேஸ்வரன் பிள்ளை லேஅவுட் சேர்ந்த ரமேஷ் என்ற புருஷோத்தமன், உக்கடம் லாரி பேட்டையை சேர்ந்த காஜா உசேன் ஆகியோரிடம் நூல் அனுப்புமாறு ரூ.18 லட்சத்து 50 ஆயிரத்து 972 கொடுத்தார் .இவர்கள் இருவரும் அவருக்கு நூல் அனுப்பவில்லை. வாங்கிய பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை. இது குறித்து மும்பை வியாபாரி பரீக்த் உக்கடம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் மோசடி கொலை மிரட்டல் உட்பட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து இருவரையும் தேடி வருகிறார்கள்..