கோவை மசாஜ் சென்டரில் விபச்சாரம்: 2 அழகிகள் மீட்பு – கேரளா வாலிபர் கைது..!

கோவை வி. கே. கே.மேனன் ரோட்டில் ஒரு மசாஜ் சென்டரில் மசாஜ் என்ற பெயரில் விபச்சாரம் நடப்பதாக காட்டூர் போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. போலீசார் நேற்று இரவு அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். .அங்கு இளம் பெண்களை வைத்து விபசாரம் நடப்பது தெரியவந்தது .இதையடுத்து மசாஜ் சென்டர் நடத்தி வந்த கேரள மாநிலத்தை சேர்ந்த சிபின் (வயது32) கைது செய்யப்பட்டார். 2 மசாஜ் அழகிகள் மீட்கப்பட்டு காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மசாஜ் சென்டர் இழுத்து மூடப்பட்டது..