தூத்துக்குடியில் சாலை பாதுகாப்பு முதலுதவி விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி.!!

ஆகஸ்ட் 4ம் தேதி உலக‌ எலும்பு மூட்டு தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நெல்லை எலும்பு மூட்டு மருத்துவர்கள் சங்கம் மற்றும் அற்புதம் மருத்துவமனை சார்பில் சாலை பாதுகாப்பு முதலுதவி குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. தென்பாகம் காவல் நிலையம் அருகில் நடந்த நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி டி.எஸ்.பி. சத்தியராஜ் தலைமை வகித்தார். வட்டார போக்குவரத்து அலுவலர் வினாயகம் முன்னிலை வகித்தார். எலும்பு மூட்டு மருத்துவர்கள் ஜேம்ஸ் சுந்தர்சிங், பாவலன், ரகுபதிராஜா, மாரிமுத்து, பாலகண்ணன், மகிழ் ஜான் சந்தோஷ், விஜய சொரூபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழன்டா கிராமிய கலைஞர்கள் பங்கேற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி மற்றும் சாலை விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு எவ்வாறு முதல் உதவி அளிப்பது என்பது குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. செவிலியர்கள், மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.