தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாநில மையத்தின் கண்டன ஆர்ப்பாட்டம்…

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் வட்டத்தில் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இன்று 05.01.2024 மாலை 5:45 மணியளவில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாநில மையம் மற்றும் மாவட்ட மையத்தினஅறிவுறுத்தலின் மூலம் டிஜிட்டல் கிராப் சர்வே பணியை புதிதாக பணியில் சேர்ந்த தகுதிக்காண் பருவம் நிறைவு பெறாத மற்றும் விளம்புகை செய்யப்படாத கிராம நிர்வாக அலுவலர்களை வைத்து தொடங்கவும் மறுத்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மிரட்டும் தோணியிலும் வெளியிடப்பட்டிருக்கும் செய்தி குறித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்தில் வரவேற்புரை :திருமதி.என். ரேவதிஅவர்கள்,தலைமை: வட்ட தலைவர் .திரு. எம் .ஜெயந்தன் அவர்கள், சிறப்புரை: வட்டச் செயலாளர் எஸ். சரவணக்குமார் நன்றி உரை: எம்.ரவீந்திரன் கிராம நிர்வாக அலுவலர் அவர்கள் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் : 13, ஆண்கள் :18 மொத்தம் : 31 நபர்கள் கலந்து கொண்டார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம். கோபிசெட்டிபாளையம்.