கோவை ஆர்.எஸ்.புரம் துணிக்கடையில் இரவு திடீர் தீ விபத்து – பரபரப்பான சிசி டிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.!!

கோவை ஆர்.எஸ்.புரம் அருகே உள்ள துணிக் கடையில் இரவு தீ விபத்து… பரபரப்பான சிசி டிவி காட்சிகள் வெளியாகியுள்ளது…

கோவை எஸ்.எஸ்.குளம் குன்னத்தூரைச் சேர்ந்தவர் பால கிருஷ்ணன். இவர் ஆர்.எஸ். புரம் டி.வி.சாமி சாலையில் உள்ள வணிக வளாகத்தில் குழந்தைகளுக்கான ஆடைகள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், வழக்கம் போல வியாபாரத்தை முடித்த ஊழியர்கள் கடையை பூட்டி விட்டு சென்று உள்ளனர்.

இரவு 10 மணியளவில் கடையில் இருந்து கரும்புகை வெளியேறிய நிலையில், சிறிது நேரத்தில் தீ கொழுந்து விட்டு எரிந்து உள்ளது.

இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் கவுண்டம்பாளையம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இந்த தீ விபத்தில் கடையில் இருந்த லட்சக் கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.