பிப்ரவரி 26 ஆம் தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்தம் :ஜாக்டோ ஜியோ…

ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அமைப்பான ஜாக்டோ ஜியோ அமைப்பு, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற வருகின்ற பிப்ரவரி மாதம், 26 ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளது. வருகின்ற 30ஆம் தேதி மாவட்ட தாளை தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடைபெறும் என்றும், பிப்ரவரி 15ஆம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழக அரசு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் மார்ச் ஒன்றாம் தேதி தொடங்க உள்ள பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை புறக்கணிக்கவும் தயங்கமாட்டோம் என்றும், சென்னையில் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே, கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வரும் 9 ஆம் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக போக்குவரத்துத்துறை சங்கங்கள் அறிவித்துள்ள நிலையில், தற்போது ஜாக்ட்டோ ஜியோவின் போராட்ட அறிவிப்பு தமிழக அரசுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.