கோவை அரசு காப்பகத்தில் இருந்து தப்பிய 4 சிறுமிகள் மீட்பு..!

கோவை காந்திமா நகர் பகுதியில் அன்னை சத்யா அரசு சிறுமிகள் காப்பகம் உள்ளது .இங்கு 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுமிகள் தங்கி உள்ளனர். இந்த நிலையில் நேற்று 16 வயதுடைய 2 சிறுமிகள், 11 வயதுடைய  2 சிறுமிகள் என மொத்தம் 4 சிறுமிகள் அதிகாலையில் காப்பகத்தில் இருந்து தப்பி சென்று விட்டனர் .இது குறித்து காப்பக பொறுப்பாளர் சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன் பெயரில் போலீசார் நகர் முழுவதும் தீவிரமாக தேடினார்கள் .இந்த நிலையில் அந்த 4 சிறுமிகளும் திருப்பூரில் ஒரு நிறுவனத்துக்கு சென்று வேலை கேட்டுள்ளனர். இது பற்றி அங்கிருந்த அதிகாரி சிறுமிகளை பாதுகாப்பாக இருக்க சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தார் உடனே போலீசார் விரைந்து சென்று அந்த சிறுமிகளை மீட்டனர். அவர்கள் 4 பேரும காப்பகத்தில் மீண்டும் ஒப்படைக்கப்பட்டனர்..