2.50 கோடி மதிப்புள்ள 11 ஏக்கர் நிலம் மோசடி- அண்ணன், தங்கை மீது வழக்குபதிவு ..!

கோவை : சென்னை பாலவாக்கத்தைச் சேர்ந்தவர் நாகேஷ் (வயது 77 )இவர் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- தனது சகோதரி கிருஷ்ண பிரியா வெளிநாட்டில் வசித்து வருகிறார். அவருக்கு சொந்தமான 11 ஏக்கர் விவசாய நிலம் திண்டுக்கல் மாவட்டம் சித்தரவு கிராமத்தில் உள்ளது. அந்த நிலத்தை தனது சகோதரர் சுரேஷ் (வயது 68) என்பவர் கோவையில் போலியாக பவர் பத்திரம் தயாரித்து மற்றொரு சகோதரி ஜெயலட்சுமி என்பவருடன் சேர்ந்து அவரது பெயருக்கு பத்திரப்பதிவு செய்து கொண்டார். இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு கூறப்பட்டுள்ளது . இது தொடர்பாக சுரேஷ் அவரது தங்கை ஜெயலட்சுமி ஆகியோர் மீது கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள் மோசடி செய்யப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ 2 கோடியே 50 லட்சம் இருக்கும்.