செங்கத்தில் பள்ளி மாணவிகளுக்கான வட்டார அளவில் நடைபெற்ற விளையாட்டு போட்டி- 40 அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவிகள் பங்கேற்பு.!!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்செங்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கான  வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது இதில் செங்கம்  மற்றும் அதனை சுற்றியுள்ள 40 க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியர் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினர்.
செங்கம் அடுத்துள்ள மேல்செங்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பெண்களுக்கான விளையாட்டு போட்டி கோ-கோ ,கபாடி, த்ரோபால்,ஹேண்ட் பால் , வாலிபால் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது இதில் செங்கம், புதுப்பாளையம் , வாசுதேவன்பட்டு, முன்னூறுமங்கலம் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவிகள் 14 வயது பிரிவு 17 வயது பிரிவு மற்றும் 19 வயது பிரிவு என மூன்று பிரிவுகளாக நடைபெற்ற போட்டிகளில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடினர்.
வட்டார அளவில் நடைபெற்று வரும் விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு முதல் இரண்டு இடங்களில் வெற்றி பெறும் பள்ளி மாவட்ட அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ளும் என தெரிவித்துள்ளனர்.