ஆவடியில் தீ விபத்து தடுப்பு குறித்து பொதுமக்களுக்கு மாதரி விழிப்புணர்வு..!!

தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணிகள் துறை இயக்குனர் அபினேஷ்குமார்  ஆணைப்படி வடமண்டல இணை இயக்குனர் பிரியா ரவிச்சந்திரன் அறிவுறுத்தலின்படி மாவட்ட அலுவலர் சென்னை புறநகர் தென்னரசு  அறிவுரைப்படி ஆவடி நிலைய  அலுவலர்  முத்துகிருஷ்ணன்  தலைமையில் நிலைய பணியாளர்களுடன் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம், ஆவடி நிலையை எல்லைக்குட்பட்ட 1-வது தெரு காமராஜர் நகர் ,ஆவடி சென்னை 54 என்ற பகுதியில் மழைநீர் தேங்கும் தாழ்வான பகுதிகளில் மழைநீரில் சிக்கிக் கொண்டவர்களை பாதுகாப்பாக மீட்பது குறித்து மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு மாதரி ஒத்திகை பயிற்சி மற்றும் தீ விபத்து விழிப்புணர்வு மாதரி ஒத்திகை பயிற்சி நடைபெற்றது . இதில் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர்கள் கலந்து கொண்டனர்..