கோவை பியூட்டி பார்லரில் அழகிகளை வைத்து விபசாரம்- 2 பேர் கைது..!

கோவை டாடாபாத் அண்ணா நகரில் உள்ள ஒரு பியூட்டி பார்லரில் விபசாரம் நடப்பதாக போலீசுக்கு தகவல் வந்தது. போலீசார் அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அழகிகளை வைத்து விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக கணபதியைச் சேர்ந்த ரோஷன் விக்னேஷ் என்பவர் சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து டாடாபாத் அண்ணா நகர் சேர்ந்த மாத்யூ (வயது 37 )குனியமுத்தூர் சுண்ணாம்பு காளவாய் பகுதியை சேர்ந்த சேர்ந்த ரபியா ( வயது 37) ஆகியோரை கைது செய்தனர்..