கோவில் உண்டியல் உடைத்து பணம் கொள்ளை-மர்ம நபர்கள் கைவரிசை..!

கோவையை அடுத்த துடியலூர் அருகே உள்ள பன்னி மடையில் அருள்மிகு .வீரமாத்தி அம்மன் கோவில் உள்ளது இது பழமை வாய்ந்த கோவில் ஆகும். நேற்று கோவில் பூசாரி பூஜை செய்ய வந்த போது கோவில் உண்டியலை காணவில்லை.இதுகுறித்து சின்ன தடாகம் போலீசில் புகார் செய்யப்பட்டது.போலீசார் வழக்கு பதிவு விசாரனண நடத்தினர். திருடபட்ட உண்டியல் வரப்பாளையம் ரோடு ஆதிபராசக்தி கோவில் அருகே திறக்கபட்ட நிலையில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதிலிருந்து பணத்தை திருடிவிட்டு, மர்ம நபர்கள் உண்டியலை வீசி விட்டு சென்றுள்ளனர்.