பெண்ணை கடத்தி கழுத்தை நெரித்து கொடூர கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனையுடன்,22 வருட சிறை..!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் மலுமிச்சம்பட்டி பகுதியை சேர்த்த வினோத் (எ) ஆண்டி பண்டாரம் கடந்த 2013 ஆம் ஆண்டு பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று கழுத்தை நெரித்துக் கொலை செய்த குற்றத்திற்காக பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வினோத் என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு கோவை மாவட்டம் மகிளா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இவ்வழக்கின் விசாரணை முடிவு பெற்று கொலை குற்றத்திற்காக வினோத்-க்கு ஆயுள் தண்டனையும் மற்ற குற்றங்களுக்கு சேர்த்து 22 வருட கடுங்காவல் தண்டனையும் மற்றும் ரூபாய் 2,000/- அபராதமாக விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

இவ்வழக்கினை சிறந்த முறையில் புலன் விசாரணை மேற்கொண்ட புலன் விசாரணை அதிகாரி மற்றும் சாட்சிகளை நீதிமன்றத்தில் சிறந்த முறையில் ஆஜர்படுத்திய நீதிமன்ற பெண் காவலர் ஆகியோர்களை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், வெகுவாக பாராட்டினார்.