கோவை மசாஜ் சென்டரில் விபச்சாரம் – பெண் கைது..!

கோவை செல்வபுரம் பேரூர் மெயின் ரோட்டில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் இரண்டாவது மாடியில் அழகு நிலையம்-மசாஜ் சென்டர் செயல்பட்டு வந்தது. இங்கு மசாஜ் என்ற பெயரில் அழகிகளை வைத்து விபசாரம் நடப்பதாக செல்வபுரம் போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. போலீசார் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு பெண்களை வைத்து விபசாரம் நடப்பது தெரியவந்தது. இது தொடர்பாக இதை நடத்தி வந்த கணபதி, 1 கணேசலே – அவுட்டை சேர்ந்த மகேந்திரன் மனைவி சுபாஷினி (வயது 30) கைது செய்யப்பட்டார் . இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மசாஜ் சென்டர் சீல் வைக்கப்பட்டது..