நாளை தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி… பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்.!!

நாளை கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளைத் துவங்கி வைப்பதற்காக தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி. முன்னதாக நேற்று கேரளத்தில் பிரதமர் மோடி, சுரேஷ்மேனன் மகள் திருமண விழாவில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் கலந்து கொள்ளும் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் தமிழகத்தில் நாளை ஜனவரி 19ம் தேதி முதல் ஜனவரி 31ம் தேதி வரை நடைபெற உள்ளது. தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை நகரங்களில் இந்த விளையாட்டுப் போட்டிகளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்த விளையாட்டுப் போட்டிகளில் அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம் செய்து வருகிறது. கடந்த ஜனவரி 4ம் தேதி தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டெல்லி சென்று பிரதமர் மோடியிடம், போட்டிகளைத் துவங்கி வைத்து, நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார்.தமிழகத்தில் நடைபெறும் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிக்கான அழைப்பிதழைக் கொடுத்து விளையாட்டுப் போட்டிகளை பிரதமர் வந்து தொடங்கி வைக்க வேண்டுகோள் விடுத்தார்.
இதன் அடிப்படையில் 2 நாள் பயணமாக நாளை தமிழகத்துக்கு வரும் பிரதமர் மோடி, கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைக்கிறார்.