நீலகிரி உதகை அரசு தாவரவியல் பூங்காவில், பொங்கல் விழா…

நீலகிரி உதகை அரசு தாவரவியல் பூங்காவில், சுற்றுலாத்துறை சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில், தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் அவர்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா இ.ஆ.ப., அவர்கள், உதகை சட்டமன்ற உறுப்பினர் ஆர்.கணேஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தர வடிவேல், மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ், துணைச் செயலாளர் ரவிக்குமார், நகர செயலாளர் ஜார்ஜ்,சுற்றுலா அலுவலர் உமா சங்கர், மற்றும் உதவி சுற்றுலா அலுவலர் அரசு அதிகாரிகள் பலர் உள்ளனர்