நடுரோட்டில் கோவை போலீஸ் அதிகாரி மீது தாக்குதல் – போதை ஆசாமி மீது வழக்குபதிவு..!

கோவை ஆர் .எஸ் .புரம். போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணி புரிந்து வருபவர் மணிகண்டன். இவர் நேற்று தடாகம் ரோடு- லாலி ரோடு சந்திப்பில் வாகன சோதனை நடத்தினார். அப்போது கருப்பராயன் கோவில் அருகே குடிபோதையில் இருசக்கர வாகனம் ஒட்டி வந்த சிவதாஸ் என்பவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தார். அவருக்கு அபராதம் விதித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த சிவதாஸ் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டனை தரக்குறைவான வார்த்தைகளால் பேசி, கைகளால் தாக்கியதாக கூறப்படுகிறது . இது குறித்து மணிகண்டன் சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்தார். போலீசார் சிவதாஸ் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாது தடுத்தல் தாக்குதல் உட்பட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்..