சிபிஐ-யின் புதிய இயக்குநராக பிரவீன் சூட் நியமனம்..!

சிபிஐ இயக்குநராக உள்ள சுபோத் குமாரின் பதவி காலம் வரும் 25ம் தேதியுடன் முடிகிறது. இதையடுத்து, சிபிஐக்கு புதிய இயக்குனரை தேர்வு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

புதிய இயக்குனராக நியமிக்கப்படுவது யார் என்பதில் பெரிய போட்டி நிலவிய நிலையில் பிரவீன் சூட்டை சிபிஐ இயக்குநராக குழு தேர்வு செய்துள்ளது.

இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த பிரவீன் சூட், டில்லி ஐஐடியில் படித்தவர். கடந்த 1986ல் ஐபிஎஸ் தேர்ச்சி பெற்றார். கர்நாடக மாநில டிஜிபியாக, 3 ஆண்டுக்கு முன்னர் நியமிக்கப்பட்டார். அவர், அடுத்த ஆண்டு மே மாதம் ஓய்வு பெற இருக்கும் நிலையில், தற்போது சிபிஐ இயக்குனராக அவர் பதவியேற்க உள்ளதால், 2025 மே மாதம் வரை சிபிஐ இயக்குநராக பணியில் இருப்பார்.