பிரபல யூட்யூபர் சவுக்கு சங்கர் கைது..!

கோவை :பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து தேனியில் இருந்த சவுக்கு சங்கரை கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் கைது செய்து அழைத்து வந்தனர். வரும் வழியில் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஐ.டி.ஐ .கார்னர் பகுதியில் காவல் துறை வாகனம் மீது கார் மோதியதாக கூறப்படுகிறது .இதில் காவலர்கள் மற்றும் சவுக்கு சங்கர் என அனைவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது . இவர்களுக்கு தாராபுரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவரை மாற்று வாகனத்தில் கோவை அழைத்து வந்தனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.