பா.ஜ.க விற்கும் தி.மு.க விற்கும் நடைபெறும் போரில் காவல்துறை உள்ளே வரக் கூடாது – பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை

பா.ஜ.க விற்கும் தி.மு.க விற்கும் நடைபெறும் போரில் காவல்துறை உள்ளே வரக் கூடாது – பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை

கோவை விமான நிலையத்தில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

தமிழகத்தில் பா.ஜ.க தொண்டர்கள் மீது வன்முறை கட்ட விழ்த்தப்பட்டு உள்ளத்காகவும், மதுரையில் நடந்த சம்பவம் எல்லோருக்கும் தெரியும் எனவும், பிரச்சினைகள் குறித்து டி.ஜி.பி.யிடம் பேசியுள்ள நிலையில்
பா.ஜ.க சார்பில் நான்கு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளதாகவும்,
இவர்கள் தமிழகத்தில் அனைத்து பகுதிகளுக்கும் சென்று தொண்டர்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் குறித்து ஆய்வு மேற்கொள்வார்கள் எனவும் தெரிவித்தார். மேலும்
டி.ஜி.பி அறிக்கையை வரவேற்பதாகவும்,
பா.ஜ.க தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என கூறிய அவர் தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை மேற்கொள்வார் என எதிர்பார்ப்பத்காக கூறினார்.
காவல்துறை ஆரம்பத்தில் சுனக்கமாக இருந்தாலும் கூட, தற்போது சுதாரித்துக் கொண்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு உள்ளதாகவும்,
முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் அதிக அளவில் மேற்கொள்ள வேண்டும் எனவும் 15 மாத காலமாக தமிழக உளவுத் துறை சரி வர செயல்படவில்லை எனவும் தெரிவித்தார். கோவை காவல்துறை அதிகாரிகள் மீது புகார் கொடுக்க உள்ளதாகவும், பா.ஜ.க தொண்டர்கள் மீது கை வைத்த யாரையும் விட மாட்டேன் என எச்சரித்துள்ளார்.
இன்னும் இரண்டு ஆண்டில் தி.மு.க ஆட்சியில் இருக்காது என தெரிவித்த அவர் நாளை பா.ஜ.க சார்பில் கண்டன போராட்டம் நடத்தப்படும் எனவும்
சட்டம் ஒழுங்கு சீர் குலைய கோவை மாநகர காவல்துறையே காரணம் என குற்றம் சாட்டினார். காவல்துறை நடு நிலையோடு நடந்து கொள்ள வேண்டும் எனவும், தடையை மீறி பா.ஜ.க சார்பில் கண்டன போராட்டம் நடைபெறும் எனவும் தெரிவித்தார்.
கருத்து சொன்னால் வன்கொடுமை தடுப்பு சட்டம் போடுவது ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்த அவர் காவல்துறை ஏவல் துறையாகவே உள்ளது என்றும்
பொதுமக்களை மிரட்டிய தி.மு.க எம்.எல்.ஏ மீது முதல்வர் நடவடிக்கை மேற்கொள்ளாத நிலையில்
எதையும் பார்த்துக் கொண்டு மத்திய அரசு வேடிக்கை பார்க்காது என்றார்.
பா.ஜ.க விற்கும் தி.மு.க விற்கும் நடைபெறும் போரில் காவல்துறை உள்ளே வரக் கூடாது எனவும்
வன்முறையை பா.ஜ.க விரும்பவில்லை எனவும் கூறினார்.