தடையை மீறி அதிகாலை ஷோ வாரிசு, துணிவு படம் வெளியிட்ட 5 தியேட்டர் மேனேஜர் மீது போலீசார் வழக்குபதிவு ..!

கோவை : நடிகர் அஜித் நடித்த துணிவு படமும், விஜய் நடித்த வாரிசு படமும் நேற்று முன்தினம் கோவையில் பல்வேறு திரையரங்குகளில் வெளியானது. சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு அதிகாலை 3 மணிக்கு சினிமா படம் வெளியிடக்கூடாது என்று மாநகர காவல் துறை தியேட்டர் நிர்வாகத்துக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது. இதை மீறி அதிகாலை 3 மணிக்கு கோவை ராம்நகர், 100 அடி ரோடு, ரேஸ்கோர்ஸ், உடையாம்பாளையம் ஆகிய இடங்களில் உள்ள சினிமா தியேட்டர்களில் வாரிசு துணிவு சினிமா படம் வெளியிட்ட மேனேஜர்கள் மூர்த்தி மகேந்திரன் ,ஆனந்த், உட்பட 5 தியேட்டர்கள் மேனேஜர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.