மூதாட்டிகளை குறி வைத்து பிளாஸ்டிரி கொண்டு சுற்றி கொள்ளையடிக்கும் கும்பலை சி.சி.டி.வி காட்சிகளைக் கொண்டு கோவையில் கைது செய்த போலீஸ்

மூதாட்டி கொலை: பவாரியா கொள்ளையர்கள் போன்று நோட்டமிட்டு திருடும் கொள்ளையர்கள் மூதாட்டிகளை குறிவைத்து பிளாஸ்டிரி கொண்டு சுற்றி கொள்ளையடிக்கும் கும்பலை சிசிடிவி காட்சிகளைக் கொண்டு கைது செய்த போலீஸ்

சூலூரில் மூதாட்டியை பிளாஸ்டிரியால் சுற்றி நகையை கொள்ளையடித்த சம்பவத்தில் பவாரியா கொள்ளையர்களை போன்று நோட்டமிட்டு கொள்ளையடித்து வந்த இளம் திருடர்களை காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு ஒரே வாரத்தில் கைது செய்துள்ளனர்.

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள பள்ளபாளையம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த சரோஜினி என்ற எண்பத்தி ரெண்டு வயது மூதாட்டியை கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக நான்கு பவுன் நகை கொள்ளை அடிப்பதற்காக வாய் கை கால்களில் பிளாஸ்திரி சுற்றி கொள்ளையடித்து சென்றது இதில் மூதாட்டி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்துள்ளார் இதனைப் பார்த்து அருகில் இருந்தவர்கள் சூலூர் காவல்துறையிடம் தெரிவித்து நிலையில் காவல்துறையினர் தனிப்படை அமைத்து சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை தேடி வந்தனர் மூதாட்டியின் வீட்டுக்கு அருகே உள்ள சிசிடிவி ஒன்றில் இளைஞர்கள் நடந்து சென்றது காவல்துறைக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது பின்னர் தொடர்ந்து 200 சிசி டிவிகளை ஆய்வு செய்த காவல்துறையினர் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் இளைஞர்கள் என்பதும் அவர்கள் பெங்களூருக்கு தப்பி சென்று இருப்பதும் தெரியவந்தது உடனடியாக பெங்களூர் விரைந்த காவல்துறையினர் அங்கே பதுங்கி இருந்த நாகர்கோவில் பகுதியை சேர்ந்த அபினேஷ் வசந்த் ஆகியோரை கைது செய்தனர் மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய 17 வயது சிறுவனை இவர்கள் இருவரும் கொடுத்த தகவலின் அடிப்படையில் நாகர்கோவிலில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர் பின்னர் சூலூர் காவல் நிலையம் அழைத்து வந்து மூவரிடம் விசாரணை நடத்தியதில் மூதாட்டியை கொலை நகைக்காக வாய் கை கால்களில் பிளாஸ்டிரியை சுற்றி விட்டு நகைகளை கொள்ளையடித்து சென்றதாக விசாரணையில் தெரிவித்துள்ளனர் பின்னர் மூவர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர் மேலும் கோவை ஈரோடு திருப்பூர் மாவட்டங்களிலும் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டு உள்ளார்களா என அந்த மாவட்ட காவல்துறையினரும் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மூதாட்டியை கொலை செய்து விட்டு சென்ற இளைஞர்களை ஒரே வாரத்தில் சிசிடிவி உதவியால் கைது செய்திருப்பதை பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.