தொழிற்சாலையில் சம்பளம் கொடுக்க வைத்திருந்த ரூ.6.50 லட்சம் பணம் திருட்டு- எலக்ட்ரிசியன் கைது..!

கோவை துடியலூர் அருகே உள்ள நல்லம்பாளையம்,ரங்கா லேஅவுட் சேர்ந்தவர் ராஜ சிம்மா (வயது 46)இவர் அங்கு சில்வர் வீட்டு உபயோக பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். கடந்13 ஆம் தேதி இரவு தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுத்த வைத்திருந்த ரூ6 லட்சத்து 50 ஆயிரத்தை தொழிற்சாலை அலுவலக மேஜை டிராயரில் பூட்டி வைத்திருந்தார்.அந்த பூட்டை உடைத்து யாரோ பணத்தை திருடி சென்று விட்டனர். இது குறித்து ராஜ சிம்மா துடியலூர் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து கோவை கணபதி ஆர் .கே. நகரை சேர்ந்த பாக்கியராஜ் மகன் ஆல்பர்ட் (வயது 29) என்பவரை நேற்று கைது செய்தனர். இவரிடமிருந்து ரூ 6.50 லட்சம் பணமும்,டி வி ஆர் – ஹார்ட் டிஸ்க் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது .இவர் அந்த நிறுவனத்தில் எலக்ட்ரீசியன் – பிளம்பராக வேலை பார்த்து வந்தவர் ஆவார்..