பிளஸ்-1 மாணவியை திருமண ஆசை காட்டி கடத்தி சென்று பாலியல் தொல்லை- போக்ஸோவில் இளைஞர் கைது..!

கோவை அருகே உள்ள தடாகத்தை சேர்ந்த 15 வயது மாணவி. இவர் அந்த பகுதியில்
உள்ள பள்ளில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்தநிலையில் மாணவிக்கு அந்த பகுதியை சேர்ந்த ஆனந்த் (வயது 19)
என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும்
அடிக்கடி நேரில் சந்தித்தும், செல்போனில் பேசியும் தங்களது காதலை
வளர்த்து வந்தனர். இந்த காதல் விவகாரம் மாணவியின் தாய்க்கு தெரிய வரவே அவர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் தனது மகளை அவர் கண்டித்தார். இது
குறித்து மாணவி தனது காதலனிடம் தெரிவித்தார். அதற்கு ஆனந்த் திருமணம் ஆசை
காட்டி மாணவியை தேனிக்கு கடத்தி சென்றார். அங்குள்ள தனது பாட்டி வீட்டில்
மாணவியுடன் அவர் வசித்து வந்தார்.

அப்போது ஆனந்த் மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்து
உள்ளார். இந்தநிலையில் மாணவியின் பெற்றோர் தனது மகளை கண்டு பிடித்து
தரும்படி தடாகம் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் மாணவியை
கடத்தி சென்ற ஆனந்தை தேடி வந்தனர். இதனை அறிந்த ஆனந்தின் சகோதரர்
தேனிக்கு சென்று மாணவி மற்றும் ஆனந்தை மீட்டு வந்து துடியலூர் அனைத்து
மகளிர் போலீசில் ஒப்படைத்தார்.

போலீசார் திருமணம் ஆசை காட்டி மாணவியை கடத்தி சென்று பாலியல் தொல்லை
கொடுத்த ஆனந்த் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை
கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.