போட்டோ ஸ்டூடியோ அதிபர், ஆட்டோ டிரைவர் தூக்கிட்டு தற்கொலை..

கோவையை அடுத்த அலந்துறை பக்கம் உள்ள சீனிவாசபுரத்தைச் சேர்ந்தவர் ஞானசுந்தரம். இவரது மகன் மோகன்ராஜ் ( வயது 33) போட்டோ ஸ்டுடியோ நடத்தி வந்தார் . இவரது மனைவி பெயர் பிஜி தா ( வயது 25) இவர்களுக்கு திருமணம் ஆகி 8 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் மோகன்ராஜ் நண்பர்களிடம் கடன் வாங்கி இருந்தாராம். அந்த பணத்தை அவரால் திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த மோகன் ராஜ் நேற்று அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி விஜிதா ஆலாந்துறை போலீசில் புகார் செய்துள்ளார். போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதேபோல ஒத்தக்கால் மண்டபம் பக்கம் உள்ள ஒக்கிலிபாளையத்தை சேர்ந்தவர் முருகன். அவரது மகன் சண்முகசுந்தரம் ( வயது 26) ஆட்டோ டிரைவர். குடிப்பழக்கம் உடையவர் . இவர் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். இதை அவர் தாயார் பண்ணாரி கண்டித்தார். இதனால் மனமுடைந்த சண்முக சுந்தரம் நேற்று அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தாயார் பண்ணாரி செட்டிபாளையம் போலீசில் புகார் செய்துள்ளார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.