ஆவடியில் மக்கள் குறை கேட்பு முகாம் – பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார் போலீஸ் கமிஷனர் சங்கர்.!!

சென்னையை அடுத்த ஆவடி போலீஸ் கமிஷனர் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பூந்தமல்லி போரூர் திருநின்றவூர் பட்டாபிராம் ஆவடி அம்பத்தூர் கொரட்டூர் திருமுல்லைவாயில் செங்குன்றம் மாதவரம் மீஞ்சூர் ஆகிய பகுதிகளில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை மற்றும் குற்றம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் குறித்து ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை தோறும் ஆவடி கமிஷனர் அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் உள்ள போலீஸ் கன்வென்ஷன் சென்டரில் மக்கள் குறை கேட்பு போலீஸ் கமிஷனர் சங்கரின் ஏற்பாட்டில் நடந்தது குறை கேட்கும் முகாமில் ஆண்களும் பெண்களும் தங்களது கைக் குழந்தைகளோடு திரளாக ஆர்வத்துடன் கலந்து கொண்டனர் தங்களது பிரச்சனைக்கு ஒரு முடிவு காலம் வந்துவிட்டது என்ற ஆசையில் சாப்பாடு மூட்டைகளை கட்டிக்கொண்டு போலீஸ் கமிஷன் சங்கரிடம் ஆர்வத்துடன் 50க்கும் மேற்பட்டோர் புகார் மனுக்களை அளித்தனர் புகார் மனுக்களைப் பெற்றுக் கொண்ட கமிஷனர் கூடுதல் கமிஷனர் கூடுதல் கமிஷனர் போலீஸ் துணை கமிஷனர் ஆவடி ஐமன் ஜமால் செங்குன்றம் பாலகிருஷ்ணன் மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் பெருமாள் போக்குவரத்து பிரிவு துணை கமிஷனர் ஜெயலட்சுமி மற்றும் உதவி கமிஷனர்களை அழைத்து பிரச்சனைகளுக்கு நல்லதொரு முடிவு ஏற்படுத்திட வேண்டுமென ஆலோசனை வழங்கினார்