கூடலூர் நெல்லியாலம் நகர மன்ற தலைவர் சிவகாமி தலைமையில் தூய்மை பணியாளர்களுடன் பொங்கல் விழா…

நீலகிரி மாவட்ட கூடலூர் நெல்லியாலம் நகர மன்ற தலைவர் சிவகாமி தலைமையில் தூய்மை பணியாளர்களுடன் பொங்கல் கொண்டாடப்பட்டது. நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் உள்ள நெல்லியாலம் நகராட்சியில் நகர மன்ற தலைவர் சிவகாமி அவர்களின் தலைமையில் தமிழர்கள் சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது இந்நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் குமரி மன்னன் நகர மன்ற துணைத் தலைவர் நாகராஜ், நகர மன்ற உறுப்பினர்களும் அரசு அதிகாரிகளும் தூய்மை பணியாளர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு சமத்துவ பொங்கல் விழாவினை சிறப்பாக கொண்டாடினர், இனிப்பு பொங்கல் பாரம்பரிய மண் பானையில் சமைத்து மத வேறுபாடு இன்று அனைவருக்கும் இந்த பொங்கல் வழங்கப்பட்டது, நிகழ்ச்சியில் நெல்லியாலம் தூய்மை பணியாளர்கள் பெண்கள் ஆண்கள் என ஒன்று கூடினர், விழா தொடர்ச்சியாக நெல்லியாலம் நகர மன்ற தலைவரோடு அனைவருக்கும் இனிப்பும் பரிசு பொருட்களையும் வழங்கி பொங்கல் நல்வாழ்த்துக்கள் நகராட்சி தூய்மை பணியாளர்கள் குடும்பத்திற்கு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தனர் விழா நிறைவாக அனைவருக்கும் இனிப்பு பொங்கல் வழங்கப்பட்டு அனைவரும் பொங்கல் வாழ்த்துக்கள் பரிமாறி சிறப்பு செய்தனர்.,