சேவல் சண்டை நடத்தி சூதாட்டம் : 3 பேர் கைது – இருசக்கர வாகனங்கள், பணம் பறிமுதல்.!

கோவை தொண்டாமுத்தூர் பக்கம் உள்ள குப்பே பாளையத்தில் ஒரு தோட்டத்தில் சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக தொண்டாமுத்தூர் போலீசுக்கு தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் அருள் பிரகாஷ் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாடியதாக சூலூர் மனோஜ் குமார் ( வயது27) தொண்டாமுத்தூர் குழந்தைவேல் ( வயது 34) கெம்பனூர் மாதேஸ் (வயது 18)ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தேவராயபுரம் கார்த்திக் ( வயது 34) தப்பி ஓடிவிட்டார். இவர்களிடமிருந்து 2 சேவல் சூதாட பயன்படுத்தப்பட்ட ரூ 900 பணமும் 3  இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.தேவராயபுரம் கார்த்திக் ( வயது 34) தப்பி ஓடிவிட்டார்.