பிறந்து ஒரு மாதமே ஆன பச்சிளம் பெண் குழந்தை மர்ம மரணம்..

கோவை அருகே உள்ள சின்னியம்பாளையம் கமலா நகரை சேர்ந்தவர் முனீஸ்வரர் ,இவரது மனைவி பாலாம்பிகை ( வயது 20) இவர்கள் இருவரும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர் 11- 8- 2023 அன்று கோவை அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது . இந்த நிலையில் கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது.கணவர் முனீஸ்வரன் சொந்த ஊரான சிவகாசிக்கு சென்று விட்டார்..மனைவி சின்னியம்பாளையத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். நேற்று வீட்டில் படுத்திருந்த குழந்தை மூச்சு பேச்சு இல்லாமல் இருந்தது. மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் குழந்தை இறந்து விட்டதாக கூறினார்கள் இது குறித்து பாலாமணி பீளமேடு போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.