தந்தையை கத்தியால் குத்திக் கொல்ல முயற்சி – மகன் கைது..!

நெல்லை மாவட்டம் சிவகிரி பக்கம் உள்ள குமாரபுரத்தைச் சேர்ந்தவர் குமார் (வயது 48) இவரது மகன் மணிகண்டன் (வயது 19) இவர்கள் மணியக்காரம் பாளையம் அன்பு நகரில் தங்கியிருந்து கட்டிட வேலை செய்து வந்தனர். நேற்று சம்பள பணத்தை வாங்கி மது அருந்தினார்கள். அப்போது இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது இதில் ஆத்திரம் அடைந்த மகன் மணிகண்டன் கத்தியால் தந்தை குமாரை குத்தினார் இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது .சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனை சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து துடியலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து மகன் மணிகண்டனை இன்று கைது செய்தனர். இவர் மீது கொலை முயற்சி உட்பட இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது