இணையத்தில் முதல்வர் குறித்து அவதூறு கருத்து: அ.தி.மு.க. நிர்வாகி கைது..!

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள மசக்கவுண்டன் செட்டிபாளையத்தை
சேர்ந்தவர் சுப்பிரமணியம் என்ற அக்ரி சுப்பிரமணியன் (வயது 46).

இவர் கோவில் பாளையத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக
உள்ளார். மேலும் கோவை புறநகர் வடக்கு அ.தி.மு.க. தொழில்நுட்ப பிரிவு
மாவட்ட தலைவராக உள்ளர். சுப்பிரமணியம் கடந்த சில நாட்களாக சமூக
வலைத்தளங்களில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் மு. கருணாநிதி மற்றும்
தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் குறித்தும் அவர்களது
குடும்பத்தினர் குறித்தும் அவதூறு தகவல்களை பரப்பி வந்துள்ளதாக
கூறப்படுகிறது. இது குறித்து கோவை மாநகர் மேற்கு மாவட்ட எஸ்.எஸ்.குளம் ஒன்றிய தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர்கள் கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் போலீசார் சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களை பரப்பி
வந்த அ.தி.மு.க. நிர்வாகி சுப்பிரமணியம் என்கிற அக்ரி சுப்பிரமணியம்
மீது தகவல் தொழில் நுட்பத்கைதை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட  பிரிவுகளின்
கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை கைது செய்து கோர்ட்டில்
ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.