மைல் கல்லில் கார் மோதி மூதாட்டி பரிதாப பலி..

கோவையை அடுத்த மதுக்கரை பக்கம் உள்ள மேட்டாங்காடை சேர்ந்தவர் கோவிந்தராஜ் .இவரது மனைவி பத்மாவதி ( வயது 53 ) இவர் நேற்று கார் ஓட்டிக் கொண்டு மன்றாம் பாளையம் – காட்டம்பட்டி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். காரில் எட்டி மடையைச் சேர்ந்த நல்லம்மாள் (வயது 88 ) என்ற மூதாட்டி பயணம் செய்தார் .இந்த கார் திடீரென்று நிலை தடுமாறி ரோடு ஓரத்தில் உள்ள மைல் கல்லில் மோதியது. இதில் காரில் இருந்த மூதாட்டி நல்லம்மாள் படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். இது குறித்து நெகமம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் கார் ஓட்டி வந்த மேட்டாங்காட்டை சேர்ந்த பத்மாவதி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..