எலுமிச்சைபழம் பறிக்கும் போது பாம்பு கடித்து மூதாட்டி பலி..

கோவை அருகே உள்ள சுண்டக்காமுத்தூர் ,பி அன். டி .காலனி சேர்ந்தவர் அரிகரன். இவரது மனைவி ராஜலெட்சுமி ( வயது 71)இவர் அவரது வீட்டில் உள்ள எலுமிச்சை மரத்திலிருந்து எலுமிச்சை பழம் பறித்தார் .அப்போது அவரது வலது கையில் பாம்பு கடித்தது .அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர் .அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இறந்தார். இது குறித்து அவரது மகன் கிருபாகரன் பேரூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.