மூதாட்டி தீக்குளித்து தற்கொலை..

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கம் உள்ள கொசுவமடையை சேர்ந்தவர் முருகேசன். விவசாயி .இவரது மனைவி சாந்தி (வயது 60) இவர் கடந்த ஒரு வருடமாக மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இருந்தாலும் குணமடையவில்லை.இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த சாந்தி நேற்று முன்தினம் அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் உடலில் மண்எண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் அவரது உடல் முழுவதும் கருகியது. சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்துவிட்டார். இது குறித்து அவரது கணவர் முருகேசன் பொள்ளாச்சி தாலுகா போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கோப்பெருந்தேவி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.