ஓடும் பஸ்சில் மூதாட்டியின் 4 பவுன் செயின் திருட்டு..!

கோவை அருகே உள்ள வடவள்ளி ஆர். கே. எஸ். நகரை சேர்ந்தவர் நாராயணன், அவரது மனைவி சாந்தகுமாரி( வயது 62 இவர் நேற்று அரசு டவுன் பஸ்சில் உக்கடம் பஸ் நிலையத்துக்கு சென்று கொண்டிருந்தார். அங்கு பஸ்சை விட்டு இறங்கும்போது இவரது கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் செயினை காணவில்லை .யாரோ திருடிவிட்டனர். இது குறித்து சாந்தகுமாரி உக்கடம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..