பி.ஏ.பி வாய்க்காலில் குதித்து முதியவர் தற்கொலை..

கோவை: திருப்பூர் மாவட்டம் உடுமலை பக்கம் உள்ள எரிசனம்பட்டியை சேர்ந்தவர் கருப்புசாமி ( வயது 60)இவர் கடந்த 5 ஆண்டுகளாக நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்கு சிகிச்சை பெற்று வந்தார் .இந்த நிலையில் இவர் தீராத கால் வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த கருப்புசாமி மலையாண்டிபாளையம் பட்டினம் அருகே உள்ள பி.ஏ.பி. வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து அவரது மனைவி பூவாத்தாள் கோமங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.