கோவை குண்டு வெடிப்பு வழக்கு ஆயுள் தண்டனை கைதி பாஷாவுக்கு 3 நாள் பரோல்.!!

கோவையில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் அல்-உம்மா இயக்க தலைவராக இருந்த பாட்ஷா உட்பட சிலர் கைது செய்யப்பட்டனர். பாட்ஷாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கோவை மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். இவர் தனக்கு பரோல் கேட்டு சிறை நிர்வாகத்திடம் விண்ணப்பித்திருந்தார். இதையடுத்து அவருக்கு இன்று முதல் 3 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது. அவர் பாதுகாப்புடன் கோவை கோட்டைமேட்டில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரது வீட்டிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது..