மருத்துவமனை விடுதியில் நர்ஸ் தூக்கிட்டு தற்கொலை..

கோவை : சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் வெள்ளகுட்டி. இவரது மகள் மோகனா (வயது 17) இவர் கோவை பீளமேட்டில் உள்ள தனியார் கண் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வந்தார். அங்குள்ள விடுதியில் தங்கி உள்ளார் . இவர் சில நாட்களாக மன அழுத்தத்துடன் காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று இவர் தங்கி இருந்த அறையில் விட்டத்தில் சேலையை கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து பீளமேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.