இனி மெட்ரோ ரயிலில் மது பாட்டில்கள் எடுத்து செல்லலாம்… மெட்ரோ நிர்வாகம் அதிரடி அறிவிப்பு.!!

டெல்லி மெட்ரோவில் மது பாட்டில்கள் எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து டெல்லி மெட்ரோ நிர்வாகம் தெரிவிக்கையில், ஒரு நபருக்கு சீல் செய்யப்பட்ட இரண்டு மது பாட்டில்கள் டெல்லி மெட்ரோவில் ஏர்போர்ட் எக்ஸ்பிரஸ் உள்ள விதிமுறைகளுக்கு இணையாக கொண்டு செல்ல அனுமதிக்கப்படுகிறது.

மேலும் மெட்ரோ பயணிகள் பயணத்தின் போது சரியான ஆவணங்களை பராமரிக்குமாறும் மெட்ரோ நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மெட்ரோவில் யாரேனும் குடிபோதையில் அநாகரிகமாக நடந்து கொண்டால் அவர்கள் மீது சட்ட விதிகளின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். மேலும் மெட்ரோவில் மது அருந்த தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.