கோவை நீதிமன்றம் அருகே இளைஞர் கொலை வழக்கில் கைதான 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது..!

கோவை கோபாலபுரத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே கடந்த மாதம் 13 ஆம் தேதி கோகுல் ( வயது 25) என்ற வாலிபர் படுகொலை செய்யப்பட்டார் . இதில் தொடர்புடைய 13 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகிறார்கள். விசாரணையில் இன்ஸ்டாகிராமில் யார் பெரிய ரவுடி ? என பதிவிடுவதில் ஏற்பட்ட மோதலில் இந்த கொலை நடந்தது தெரிய வந்தது. எனவே போலீசார் சமூக வலைதளங்களை கண்காணித்து வருகின்றனர் . இதையடுத்து கோகுல் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கோவை ரத்தினபுரி சம்பத் வீதியை சேர்ந்த சூர்யா ( வயது 23) சிவானந்தா காலணியை சேர்ந்த கார்த்திக் (வயது 23) காந்திபுரம் சாஸ்திரி நகரை சேர்ந்த டேனியல் (வயது 23)  கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார். இதையடுத்து 3 பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்ட்டனர். இதற்கான உத்தரவு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்களுக்கு நேற்று வழங்கப்பட்டது..