கோவையில் போதை மாத்திரைகளுடன் 2 வாலிபர்கள் கைது..!

கோவை குனியமுத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆகியோர் நேற்று இரவு குனியமுத்தூர் சதாம் நகர் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து சோதனை செய்தனர் . அவர்களிடம் மொத்தம் 27 போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது .இது தொடர்பாக இருவரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் குனியமுத்தூர் பாலக்காடு ரோடு,சதாம் நகரை சேர்ந்த ஜியாவுதீன் ( வயது 31) செந்தமிழ் நகரை சேர்ந்த சத்தியமூர்த்தி ( வயது 19) என்பது தெரியவந்தது. இவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது..