ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி.!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் கோட்டாம் பட்டியில் ஒரு வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது .இந்த நிலையில் நேற்று அதிகாலை பெங்களூருவில் உள்ள வங்கியின் தலைமை அலுவலகத்தில் இருந்து கிளை மேலாளர் சரவணன் செல்போனுக்கு அங்குள்ள ஏடிஎம் எந்திரத்தை யாரோ உடைக்க முயற்சி செய்வதாக குறுஞ்செய்தி வந்தது. உடனே அவர் விரைந்து சென்று பார்த்த போது ஏடிஎம் எந்திரத்தை உடைத்துக் கொள்ளை முயற்சி நடந்திருப்பது தெரியவந்தது .இது குறித்து கோட்டூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் அங்கு பதிந்து இருந்த கைரேகையை பதிவு செய்தனர் .இது தவிர கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளையர்களை போலீசார் தேடி வருகிறார்கள்..