குடிபோதையில் வீட்டுக்கு வந்த மகனை இரும்பு தடியால் தாக்கிய தந்தை கைது..!

கோவை புதூர,எம்.ஜி.ஆர் .நகர், விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். சென்ட்ரிங் தொழிலாளி.இவரது மனைவி சாந்தி (வயது 42) இவர்களுக்கு திருமணமாகி 32 ஆண்டுகள் ஆகிறது. 2மகன்கள் உள்ளனர். 2 -வது மகன் சுகுமார் (வயது 28 )பி. காம்.( சி. ஏ )படித்து முடித்துவிட்டு குளத்துப்பாளையம் பிரிவில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.குடிப்பழக்கம் உடையவர். தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவார்.நேற்று வழக்கம்போல மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார்.இதை அவரது தந்தை ராஜேந்திரன் கண்டித்தார்,இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது .இதில் ஆத்திரமடைந்த ராஜேந்திரன் அருகில் கடந்த இரும்பு தடியால் மகன் சுகுமாரின் தலையில் ஓங்கி அறைந்தார் .இதில் அவரது மண்டை உடைந்தது .சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் .இது குறித்து ராஜேந்திரன் மனைவி சாந்தி குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார்.இன்ஸ்பெக்டர் சதீஷ் சம்பவ இடத்துக்கு லிரைந்து சென்று விசாரணை நடத்தினார். இது தொடர்பாக சுகுமாரின் தந்தை ராஜேந்திரன் ( வயது 55 )கைது செய்யப்பட்டார் இவர் மீது கொலை முயற்சி உட்பட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.