பைக்கில் 4 கிலோ கஞ்சா கடத்திய வடமாநில வாலிபர் கைது..!

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதுரை நேற்று அங்குள்ள ராம செட்டிபாளையம் ரயில்வே பாலம் அருகே வாகன சோதனை நடத்தினார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தார். அவரிடம் 4 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். கஞ்சாவும், பைக்கும் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் அவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சொட்டுகுமார் ( வயது 29) என்பது தெரிய வந்தது. இவர் பெருந்துறை பகுதியில் கடந்த 6 மாதங்களாக தங்கி இருந்து வெல்டிங் வேலை செய்து வருகிறார். ரயில் மூலம் வட மாநிலத்திலிருந்து கஞ்சா கடத்தி வந்து அந்த பகுதியில் உள்ள தொழிலாளர்களுக்கு விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்தது.