நாய் வளர்ப்பதில் தகராறு: பெண்ணுக்கு அடி உதை- பக்கத்து வீட்டுக்காரர் கைது..!

கோவை சுந்தராபுரம், மேட்டூர் நாச்சிமுத்து கவுண்டர் விதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் .இவர் இறந்துவிட்டார் இவரது மனைவி கல்பனா (வயது 46 )இவர் அவரது வீட்டில் நாய் வளர்த்து வந்தார். இதன் காரணமாக இவருக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் உமாசங்கர் ( வயது 45) என்பவரது தாயாருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று கல்பனா அவரது வீட்டின் முன் உட்கார்ந்து கொண்டிருந்தார் .அப்போது அங்கு வந்த உமாசங்கர் அவரது தங்கைமகன் சூர்யா ஆகியோர் சேர்ந்து கல்பனாவை கைகளால் தாக்கினார்கள்.பின்னர் இரு சக்கர வாகனத்தை அவர் மீது மோத விட்டனர்.இதில் அவர் படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து கல்பனா போத்தனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் பக்கத்து வீட்டுக்காரர் உமா சங்கர் (வயது 45) என்பவரை நேற்று கைது செய்தனர். அவரது தங்கை மகன் சூர்யாவை தேடி வருகிறார்கள்.