Faroe Island-க்கு நடுவே பர்த்டே கொண்டாட்டம்… இணையத்தை கலக்கும் சூர்யா, ஜோதிகாவின் போட்டோஸ்..!!

திரைத்துறையில் நடிகர், நடிகைகள் காதல் வயப்படுவது பின் சில கருத்து வேறுபாடுகளால் அந்த உறவு பாதியிலேயே முறிவதும் சகஜமான ஒன்றாக இருந்துவருகிறது.
காதலைத் தாண்டி அந்த உறவு திருமணத்தில் முடிந்தாலும் பலரது திருமணம் விவாகரத்தில் முடிவதையும் நாம் பார்க்கிறோம். ஆனால் தமிழ் திரைத்துறையில் இந்த ஜோடி விதிவிலக்கு என்றுதான் கூற வேண்டும். கோலிவுட்டில் அனைவரும் வியந்து பார்க்கும் தம்பதிகளில் ஒருவர்தான் சூர்யா – ஜோதிகா தம்பதி. பூவெல்லாம் கேட்டுப் பார் படத்தில் காதல் வயப்பட்ட இந்த ஜோடி பல தடைகளுக்கு பிறகு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தியா, தேவ் என்று இரு குழந்தைகளும் உள்ளனர். திரைத்துறை, குடும்ப வாழ்கை என இரண்டையும் அழகாக கொண்டு செல்லும் இவர்கள் தமிழ் சினிமாவின் Perfect Couple ஆக இன்றளவிலும் பார்க்கப்படுகின்றனர்.

தற்போது சூர்யா, ஜோதிகா வட ஐரோப்பாவில் நார்வே கடலுக்கும் வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலுக்கும் இடையில் அமைந்துள்ள தீவுக் கூட்டம் Faroe Island-க்கு குடும்பத்துடன் தங்களின் மகன் தேவின் பிறந்தநாளை கொண்டாட சென்றுள்ளனர்.