வடமாநில வாலிபருக்கு பீர் பாட்டிலில் குத்தி செல்போன் பறிப்பு..!

கோவை : பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் அனோஜ் குமார் ( வயது 18 )இவர் போத்தனூர் பகுதியில் தங்கியிருந்து கட்டிட வேலை செய்து வருகிறார்.நேற்று இவர் தனது நண்பர் 2 பேருடன் அங்குள்ள பிள்ளையார்புரம் காட்டுப் பகுதியில் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த 4 பேர் இவர்களை வழிமறித்து பீடி கேட்டனர்.பின்னர் செல்போனை கேட்டனர். கொடுக்க மறுத்ததால் 4 பேரும் சேர்ந்து பீர் பாட்டில் அனோஜ்குமார் தலையில் தாக்கினார்கள் .பின்னர் அவரிடம் இருந்து செல்போனை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டனர் .இதுகுறித்து போத்தனூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து 4பேரை தேடி வருகிறார்கள்.